- Charles Spencer Chaplin
திரைப்படங்களில் இருந்து கற்றுக்கொள்வதற்கு என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு முதலில் சாப்ளினின் படங்களை பாருங்கள் என்பதுதான் என் பதில். சார்லி சாப்ளின் வெறும் கோமாளியல்ல. காதலை பாடிய கவிஞன், அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்த ஒரு போராளி, வறுமையை கூட தன் நகைச்சுவை உணர்வால் விரட்டியடித்த ஒர் உயர்ந்த மனிதன். எந்த உறவிலும் சாய்ந்து கொள்ள முடியாத தடுமாற்றத்தோடு சுற்றித் திரியும் ஒரு நாடோடியாக வந்து நட்பையும், காதலையும், மனிதாபிமானத்தையும் திரையில் பதிவு செய்த ஓர் மாமேதை.
சாப்ளிளின் திரைப்படங்களில் என் நிரந்தர விருப்பத்திற்குரியது The Circus, City lights, The Kid ஆகியவை. இந்தப் படங்களை பார்த்து முடிக்கும் போது மனதுக்குள் ஏற்படும் அந்த உணர்வே ஒரு புது அனுபவமாக இருக்கும். இத்தனை பெரிய கால மாற்றத்தை கடந்து தனக்கென தனியான ரசிகர்களை கொண்டிருப்பது சாப்ளின் மட்டுமே. இன்னும் சொல்லப்போனால் சாப்ளினின் பாதிப்பு இல்லாத நடிகர்களே சினிமா உலகில் இல்லை. இவரது நகைச்சுவையைப் பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது. அதேப் போல் துளிக் கண்ணீர் சிந்தாதவரும். காரணம் சாப்ளினின் நகைச்சுவை வலியில் இருந்து உருவாவது. சாப்ளினின் திரைப்படங்கள் வழியே வரும் சிரிப்பும் கண்ணீரும் உன்னதமானது. மொழியின்றி அவரது படங்கள் உணர்த்தும் பாடங்கள் ஏராளம். அவற்றை புரிந்துகொள்வதற்கும் வாழ்க்கைப்படுத்துவதற்கும் தேவையாய் இருப்பது மனதின் விருப்பம் மட்டுமே.
ஒரு முறை ஒரு பேட்டியில் நடிகர் விவேக் சொன்னது நினைவுக்கு வருகிறது.
City lights ன் க்ளைமாக்ஸ் காட்சியில் உங்களுக்கு கண்கள் பனித்து, உதடு துடித்து, மேனி சிலிர்த்து, தொண்டை அடைக்கவில்லை என்றால்... உடனே டாக்டரை பார்க்கவும்.
சத்தியமான வார்த்தைகள்.
***

Appreciable to have a person here to start with a form of essaying.
பதிலளிநீக்குCommenting now will be an actual unnecessary tool to further you the habit of writing, in my sense.
May be some years later of saturation, your essays may clearly show you the way you should write.
Apart from above issues, I feel glad about your stable entry after a comfortable period of gestation of thoughts.
Miles to go before you sleep !
Have a visit at
பதிலளிநீக்குmeetmadhan.blogspot.com