வியாழன், 16 செப்டம்பர், 2010
உறக்கம் என்ற படகு
ஞாயிறு, 18 ஜூலை, 2010
ஓடி விளையாடும் உறவுகள்
ஞாயிறு, 4 ஜூலை, 2010
Pen சித்திரங்கள்
வியாழன், 24 ஜூன், 2010
மீள முடியாத் துயரம்
திங்கள், 21 ஜூன், 2010
ஒரு குறுஞ்செய்தி
திங்கள், 7 ஜூன், 2010
கர்ண மோட்சம்
புதன், 2 ஜூன், 2010
கோபாலரத்னம் சுப்ரமணியம்
வெள்ளி, 28 மே, 2010
பூவின் பாடல்
செவ்வாய், 25 மே, 2010
இசைப்பேரரசு
செவ்வாய், 18 மே, 2010
கரையும் வைரம்
மிக்கற்றால் நீள விடல் (1302)
வெள்ளி, 14 மே, 2010
காதலின் சுபாவம்
செவ்வாய், 11 மே, 2010
பேசும் படங்கள்
- Charles Spencer Chaplin
வெள்ளி, 7 மே, 2010
பனி விழும் ஒரு வனம்
Stopping by Woods on a Snowy Evening
Whose woods these are I think I know.
His house is in the village, though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.
My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.
He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound's the sweep
Of easy wind and downy flake.
The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
Robert Frost
செவ்வாய், 4 மே, 2010
நெஞ்சில் ஓர் ஆலயம்
சனி, 1 மே, 2010
இரவு எத்தனை அழகு
புதன், 28 ஏப்ரல், 2010
கடவுளைத் தேடி
வியாழன், 22 ஏப்ரல், 2010
வைர வரிகள்
திரைப்படம்
இருட்டில் காட்டப் படுவதாய்
இருக்கட்டும்!
ஆனால் – அது
வாழ்க்கையின் வெளிச்சத்தில்
எடுக்கப்படட்டும்!
காதலரே காதலரே!
உங்களுக்கு உரைப்பதற்கு
ஒன்றுண்டு
கனவுப்பயிர் வளரும்
காதல் நிலத்தை
வினோபாவைப் போல்...
பிச்சை விருத்தாந்தத்தால்
பெறமுடியாது:
அது
மார்க்சின் தத்துவத்திற்கே
மசியும்.
காந்தி மகாத்மா
அப்படியொன்றும் உன்னை
அடியோடு மறக்கவில்லை
அண்ணலே!
இன்னும்
நகரத்து பெண்களிடம்
உனக்கு
நல்ல செல்வாக்கிருக்கிறது!
உன்னை பின்பற்றி
அரையாடை கட்டுவது
அவர்கள்தாம் இப்போது.
கோயில் செய்குவோம்
இன்னும் கொஞ்ச நாளில் –
அத்தனை சட்டசபைகளும்
ஆலயங்கள் ஆகலாம்!
அங்கும்...
செருப்போடு நுழைவது
தடை செய்யப்படலாம்.
காடு
குறிஞ்சியின் குழந்தை!
முடி வெட்டிக் கொள்ளாத
மூத்த பூங்கா!
ஆளுக்கொரு கோப்பை
தேநீர் பருகும் கணங்கள்
சில நிமிடத் திருவிழாக்கள்
பழைய மனைவியின்
முத்தம் போலொரு
சம்பிரதாயமல்ல தேநீர் பருகல்
ஒவ்வொரு மிடறும்
புதிய காதலியின் பசித்தமுத்தம்.
திங்கள், 19 ஏப்ரல், 2010
தி வே ஹோம்
புதன், 14 ஏப்ரல், 2010
என் பெருங்கனவு
ஞாயிறு, 11 ஏப்ரல், 2010
ஆக்ஸிஜன் அற்ற அழகி
என்னை வேடிக்கை பார்த்தது போதும் – நீ
கண் சிமிட்டி கை அசைத்தால் – என்
காயங்கள் கொஞ்சம் ஆறும்
உன் களங்கம் இல்லா அழகு – நான்
இரவில் உண்ணும் உணவு
நீ சட்டென்று மறையும் பொழுது – என்
கண்களில் குறையும் கனவு
மோகம் வந்த போது – உன்
தேகம் மறையவில்லை – அட
மேகம் வந்த போது – அது
பட்டென்று மறைந்ததடி
மீண்டும் உன்னை காண – என்
கண்கள் ஏங்கும் பொழுது – நீ
நீந்திக்கொண்டு வருவாய் – உன்
தடைகளை உடைத்தபடி
வானுக்கும் பூமிக்கும் பாலம் வகிப்பவளே – நான்
ஏங்கவும் பின் தூங்கவும் ஒரு பாதை வகுத்தவளே
ஆக்ஸிஜன் அற்ற அழகி – நீ
அஹிம்சை கொஞ்சம் பழகி
மனதை மெதுவாய் வருடி – என்னை
முழுதாய் திருடு திருடி...
பாடல் : மெல்லினமே மெல்லினமே.....
படம் : ஷாஜஹான்
இசை : மணிஷர்மா
வெள்ளி, 9 ஏப்ரல், 2010
அறுபதுகளின் பாடல்
செவ்வாய், 6 ஏப்ரல், 2010
அனுப்பாக் கடிதம்
சொர்க்க தரிசனம்
நேற்றிரவு ‘’சாலையை கடக்கும் குழந்தை’’ எனும் தலைப்பில் வார இதழொன்றில் வெளிவந்த நாவிஷ் செந்தில்குமாரின் கவிதையை வாசித்தேன். படித்து முடித்ததும் குழந்தைகளின் மீதான அன்பும் அக்கறையும் பெருகத்துவங்கியது. அதோடு மட்டுமல்லாமல் ஒரு குழந்தையை கைப்பிடித்து கூட்டிக்கொண்டு உலாப்போகும் ஆசையில் மனதும் ஏங்கத்துவங்கியது. குழந்தைகளை வெறும் தொல்லைகளாகவே மட்டும் பார்ப்பவர்களுக்கு இக்கவிதை சிறிதளவாவது அவர்களின் மீது விருப்பத்தை ஏற்படுத்தக்கூடும். போராட்டமும் அவசரமும் நிறைந்த வீட்டில் குழந்தைகள் ஆனந்தமாகவும் பொறுப்பாகவும் வளர வாய்ப்பில்லை என்று யாரோ எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது. ஒரு வீட்டில் குழந்தை பிறக்கிறதென்றால் வாழ்க்கை குறித்து நாம் கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு அது. அவர்கள் உணர்த்தும் பாடங்கள் அற்புதமானவை. அதை விளக்கிச் சொல்வது அவ்வளவு எளிது இல்லை.
இதோ அந்தக் கவிதை:
ஒரு குழந்தை
சாலையைக் கடக்க
உதவக் கோரினால்
சட்டென்று செயல்படாதீர்கள்.
சிறு மலரை
உள்ளங்கையில் வைத்து
விரல்களை குவித்து
மூடித் திறக்கையில்
இதழ்கள் கசங்கவில்லை
என்றால் மட்டுமே
அதன் கரங்களை பற்றுங்கள்.
கடக்கும்போது
எதிர்ப்புரத்தை அடைவதில்
அவசரம் காட்டாதீர்கள்
வாகனத்தில் வருபவர்களையும்
காத்திருக்கச்சொல்லுங்கள்.
மறுமுனையை அடைந்ததும்
‘இனி நீயாக போய்விடு’
என்று சொல்லிக்
கிளம்பிவிடாதீர்கள்.
பள்ளி வரையோ
வீடு வரையோ அழைத்தால்
போய் வாருங்கள்.
அலுவலகத்துக்கு
நேரமாகிவிட்டதாகவோ
இதர வேலைகள் இருப்பதாகவோ
துளியும்
காட்டிக்கொள்ளாதீர்கள்
எவ்வளவு நேரமானாலும்
விடைபெறும் முடிவைக்
குழந்தையிடமே விட்டுவிடுங்கள்.
உங்கள் வயதை
அனுபவத்தை
முடியும் வரை குறைத்துவிடுங்கள்
அதற்குத் தெரிந்த கதைகளை
அதன் மொழியில்
அப்படியே சொல்லவிடுங்கள்
இடையிடையே
‘ம்ம் .. ம்ம் ..” என்று சொல்லுங்கள் .
விண்மீன்கள்தான் எனக்கு
விளையாட்டுப் பொருட்கள்
எனச் சொன்னால்
உடைந்த அல்லது
பழையதாய் ஒன்றை
அதனிடமிருந்து
கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள் .
சில முத்தங்களை கொடுத்தால்
எச்சிலை துடைத்துவிடாதீர்கள்
காய்வதற்குள் வீடு வந்து
நாட்குறிப்பில்
‘சொர்க்கத்தை தரிசித்த தினம்’
என மறக்காமல்
குறித்துவைத்துக்கொள்ளுங்கள்!
