ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

ஆக்ஸிஜன் அற்ற அழகி

வெண்ணிலவே வெண்ணிலவே

என்னை வேடிக்கை பார்த்தது போதும் – நீ

கண் சிமிட்டி கை அசைத்தால் – என்

காயங்கள் கொஞ்சம் ஆறும்

உன் களங்கம் இல்லா அழகு – நான்

இரவில் உண்ணும் உணவு

நீ சட்டென்று மறையும் பொழுது – என்

கண்களில் குறையும் கனவு



மோகம் வந்த போது – உன்

தேகம் மறையவில்லை – அட

மேகம் வந்த போது – அது

பட்டென்று மறைந்ததடி

மீண்டும் உன்னை காண – என்

கண்கள் ஏங்கும் பொழுது – நீ

நீந்திக்கொண்டு வருவாய் – உன்

தடைகளை உடைத்தபடி



வானுக்கும் பூமிக்கும் பாலம் வகிப்பவளே – நான்

ஏங்கவும் பின் தூங்கவும் ஒரு பாதை வகுத்தவளே

ஆக்ஸிஜன் அற்ற அழகி – நீ

அஹிம்சை கொஞ்சம் பழகி

மனதை மெதுவாய் வருடி – என்னை

முழுதாய் திருடு திருடி...



ஒரு அமாவாசை இரவில் நான் எழுதிய பாடலிது. இந்தப்   பாடல் பிடித்திருந்தால் மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்கள் இல்லையென்றால் கீழ்கண்ட ட்யூனில் பாடிப்பாருங்கள். அப்போதும் பிடிக்காதவர்கள் வைரமுத்துவிடம் மட்டும் சொல்லிவிடாதீர்கள்.

பாடல் : மெல்லினமே மெல்லினமே.....
படம் : ஷாஜஹான்
இசை : மணிஷர்மா
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக