என்னை வேடிக்கை பார்த்தது போதும் – நீ
கண் சிமிட்டி கை அசைத்தால் – என்
காயங்கள் கொஞ்சம் ஆறும்
உன் களங்கம் இல்லா அழகு – நான்
இரவில் உண்ணும் உணவு
நீ சட்டென்று மறையும் பொழுது – என்
கண்களில் குறையும் கனவு
மோகம் வந்த போது – உன்
தேகம் மறையவில்லை – அட
மேகம் வந்த போது – அது
பட்டென்று மறைந்ததடி
மீண்டும் உன்னை காண – என்
கண்கள் ஏங்கும் பொழுது – நீ
நீந்திக்கொண்டு வருவாய் – உன்
தடைகளை உடைத்தபடி
வானுக்கும் பூமிக்கும் பாலம் வகிப்பவளே – நான்
ஏங்கவும் பின் தூங்கவும் ஒரு பாதை வகுத்தவளே
ஆக்ஸிஜன் அற்ற அழகி – நீ
அஹிம்சை கொஞ்சம் பழகி
மனதை மெதுவாய் வருடி – என்னை
முழுதாய் திருடு திருடி...
ஒரு அமாவாசை இரவில் நான் எழுதிய பாடலிது. இந்தப் பாடல் பிடித்திருந்தால் மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்கள் இல்லையென்றால் கீழ்கண்ட ட்யூனில் பாடிப்பாருங்கள். அப்போதும் பிடிக்காதவர்கள் வைரமுத்துவிடம் மட்டும் சொல்லிவிடாதீர்கள்.
பாடல் : மெல்லினமே மெல்லினமே.....
படம் : ஷாஜஹான்
இசை : மணிஷர்மா
***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக